உலகின் ஒரே ஓர் உயர்தனிச்
செம்மொழி என்றால் அது தமிழ் மட்டும்தான். இழிகாமம் (ஆபாசம்) நிறைந்த நூல்களை உடைய
சமற்கிருதத்திற்கு இல்லாத சிறப்புகளை எல்லாம் இருப்பதாகக் கூறி உயர்வான
மொழியாகக் காட்டி வருகிறார்கள். சமற்கிருத நூல்கள் அனைவரையும் ஒத்து அளவில்
மதிக்கும் சமநிலை அறநெறிக்கு மாறானது இத்தகைய தாழ்நிலை மொழியைத்தான்
உயர்த்திக் கூறிப் பல்லாயிரம் கோடி உரூபாயை இந்திய ஒன்றிய அரசு
செலவழிக்கிறது. பத்தாயிரம் பேர்கூடப் பேசாத சமற்கிருதத்தின் குறைகளையும்
உயர்வின்மையையும் சமற்கிருத அறிஞர்களே ஆராய்ந்து தெரிவித்துள்ளனர்.
இவற்றைப் பேரா.முனைவர் ப.மருதநாயகம் அருமையாக நமக்கு அளிக்கிறார். அது
குறித்த கண்ணோட்டமே “சமற்கிருதம் செம்மொழி அல்ல – மருதநாயகம் ஆய்வுரை”
என்னும் இந்நூல் சமற்கிருதம் செம்மொழியல்ல .