புற்றீசல் போல் புதினங்கள் பொங்கி வரும் காலமிது! எண்ணத்திலும் இதயத்திலும் எந்தவித உயர்ந்த எழுச்சியையோ, நோக்கத்தையோ எழுப்பாது, நகைப்பையும், வியப்பையும் சிறு மகிழ்வையும் பெருக்கி, காலத்தை நகர்த்துவதற்குப் பயன்படும் நூல்கள் வெளிவரும் காலமிது! இந்நிலையில் சங்கத் தமிழ்த் தொகைநூல்களுள் ஒன்றான 'முல்லைப்பாட்டு' என்னும் சிறந்த நூலை உங்கள் கரங்களில் தவழ விடுவதைப் பெருமையாகக் கருதுகிறோம்.