நம் நாட்டில் தோன்றிய அருளாளர்களான சித்தர்கள் ஆன்மீக வழிகாட்டிகளாக மட்டுமின்றி மனிதர்களது நோயைக்குனமாக்கும் அற்புத மருத்துவ முறைகளையும் நமக்கு மாபெரும் வரமாகவே அருளியிருக்கிறார்கள். போகர்,புலிப்பாணி ,தேரையர் போன்ற மாபெரும் சித்தர்கள் நமக்கு வழங்கிச் சென்றிருக்கும் மருத்துவ முறைகள் மாபெரும் வரப்பிரசாதமாகும். உணவையே கூட மருந்தாக்கி நோய் வராமலும், வந்த நோயைப் போக்கவும் வழி வகுத்திருக்கிறார்கள். பக்க விளைவு இல்லாத எளிமையான சித்த மருத்துவத்தின் பெருமை தற்போது பாரெங்கும் பரவத் தொடங்கியிருக்கிறது. சித்த மருத்துவத்திற்கு ஒரு மாபெரும் புது மலர்ச்சியே தோன்றியிருக்கிறது. இந்நூலில் பல்வேறு நோய்களுக்கு எளிமையான மருத்துவ முறைகளை சிறப்புற விளக்கியிருக்கிறார் மருத்துவர் திருமலை நடராசன் அவர்கள்,பரம்பரையான சித்த மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த அவரது தெளிவான ஆழ்ந்த அனுபவம் இந்நூலில் பளிச்சிடுகிறது.