நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் சுறுசுறுப்பாக நடப்பதன் மூலம் பாதிப்பைக் குறைத்துக் கொள்ளலாம்.இன்சுலினைச் சுரக்கும் கணையம் அதனால் சுறுசுறுப்பு அடைகிறது. எல்லா வயதினரும் நடக்கலாம். முதலில் மெதுவாக,போகப்போக வேகமாக நடக்க வேண்டும். பதினைந்து நாட்கள் நடந்தால் உடம்பின் நிலை வசப்பட்டுவிடும். காலை நேரத்தில் அமைதியாக நடந்துவிட்டு வருவது நல்லது.உடம்பில் கொழுப்பு சத்து சேருவதை அது குறைக்கும். ஜீரணம் சுறுசுறுப்பு அடையவும், மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் அது உதவும்.புரதம் , மாவுப் பொருள் ஆகியவை உணவில் சேருவது நல்லது. கொழுப்பு தேவையானாலும் அளவோடு இருப்பது நல்லது. இவையாவற்றையும் ஜீரணிக்க உதவும் எளிய உடற்பயிற்சி நடப்பதுதான்.