சிக்கனம் என்னும் சொல்லிலேயே கெளரவம் நிறைந்து இருக்கிறது. இதனால், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மற்றவற்றை வேண்டா என்று ஒதுக்கித் தள்ளும் மனோபாவம் வளர்ந்து. மனிதனின் குணநலன்களை ஊன்று கோலாகிறது. இதுவும் தவிர பண்பட்ட மனத்தையும் அது உருவாக்குகிறது. இன்றைக்கும், நாளைக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொருளாதாரத் திட்டம்தான் சிக்கனம். செல்வம் உழைப்பால் சேருகிறது , சேமிப்பால் காப்பாற்றப்படுகிறது. விடாமுயற்சியால் அது வளர்க்கப்படுகிறது. சிக்கன உணர்வு,பிறவியில் தோன்றும் ஒரு குணம் அல்ல. அனுபவத்தாலும்,உதாரணங்களாலும் முன் யோசனையாலும் வளர்க்கப்படும் ஒன்றுதான் அது. மனிதன் புத்திசாலியாக சிந்தனையாளனாக மாறும் போதுதான் அவன் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறான்.ஒருவன் எவ்வளவு செலவழித்தான்,எப்படிச் செலவழித்தான் என்பதைக் கொண்டு தான் அவனது தகுதி நிர்ணயிக்கப்படுகிறது.