மக்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆர்வமிக்க மாணவர். மாணவர்கள்,குடிசைவாசிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல சங்கங்களிலும் இயக்கங்களிலும் பங்கு கொண்டவர். டாக்டர் ஆனந்த் டெல்டும்டே சமகால சமூக அரசியல் நிலைமைகள் பற்றி கூர்ந்த மதியும் ஆராய்ச்சி அறிவும் கொண்டவர் என்று பெயர் பெற்றவர். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் எண்ணிய இந்திய ஜனநாயகப் புரட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை முழுவதையும் ஆய்வு செய்யும் தகுதி பெற்றவர் இவர் என்பதில்ஆச்சரியம் ஏதுவுமில்லை.தலித் இயக்கக் கொள்கைகளையும் நடைமுறையையும் உலகளாவிய புரட்சிகரப் போராட்டத்துடன் இணைக்கும் வகையில் டாக்டர் அம்பேத்கருக்கு மறுவிளக்கம் அளிக்க வேண்டிய அவசர அவசியத்தை இந்நூல் விளக்குகிறது.