அம்பேத்கர், பெரியார், காரல் மார்க்ஸ் (அபெகா) பண்பாட்டு இயக்கம் மூலமாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக பாடுபட்டு வருபவர் மருத்துவர் நா. ஜெயராமன். நிமிடங்களோடு போட்டிப்போடும் முன்னணி மருத்துவராக இருந்த போதிலும் தன் பணியோடு சமூகப் பணிக்கும் சமநேரம் வழங்குகிற கருத்துப் போராளி.
அவர் எழுதியுள்ள “காந்தியின் தீண்டாமை” நூலில் அவர் எடுத்துவைத்த வாதங்கள் சிந்தனை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை.