1871, மார்ச் 18 அன்று பாரிஸ் மக்கள் அதுவரை தாங்கள் கனவு கண்ட உலகிற்கு உண்மையிலேயே செல்ல ஒரு கதவு திறந்தனர். 72 நாட்கள் பாரிஸ் பாட்டாளிகள் உண்மையான ஜனநாயகத்திற்கான அமைப்புகளை நிறுவினர்.
1871, மே 28 அன்று எதிர்ப் புரட்சி சக்திகள் ஒன்று திரண்டு பெரும்படையுடன் வந்து, முகிழ்த்து வந்த பாட்டாளிவர்க்க அரசை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து கனவைக் கலைத்தனர்.