அவரது தீராத பக்கங்களில் எழுதியவற்றைச் சிறு சிறு நூல்களாகவும் கொண்டு வந்து அதிலும் முன்னத்தி ஏராகி நின்றார். அவருடைய பதிவுகளில் முகநூல் தானே என்று விட்டேத்தியாக எழுதுவதைப் பார்க்கவே முடியாது.
ஒவ்வொரு பதிவும் தெளிவான அரசியல் பார்வையுடன் கூர்மையாக இருக்கும். எனக்கு வியப்பளிக்கும் செயல் இது. தமிழகத்தின் பல முக்கியமான அரசியல் தலைவர்களும் மாதுவின் கருத்துக்களை விடாமல் வாசிப்பதை நான் அறிவேன்.