மனிதனின் புத்திக்கூர்மைக்கு ஏற்ப பழகி செயல்படும் செல்லப்பிராணி _ நாய். நாய்கள் வீட்டைக் காவல் காப்பதற்கு மட்டுமே என்ற நிலை மாறி, இன்று மனிதனுக்கு பல்வேறு வகைகளில் அவை உதவியாக இருக்கின்றன. தன் மோப்ப சக்தியாலும், மிகத்துல்லியமான கேட்கும் திறனாலும், அதன் போர்க் குணத்தாலும் மனிதனுக்கு நாய் பலவிதங்களில் நண்பனுக்கு மேலாக இருந்து செயல்படுகிறது. நாயின் பல்வேறு இனங்கள், சிறப்புப் பண்புகள், அவற்றைத் தேர்வு செய்யும் முறை, வளர்க்கும் முறைகள், பயிற்சி அளிக்கும் வழிகள், அவற்றின் உணவு, பழக்கவழக்கம், அவற்றை எப்படி சந்தைப் படுத்துதல் போன்ற தகவல்கள் மற்றும் நாய்க்கு வரும் நோய்கள், அவற்றிடமிருந்து மனிதனுக்குப் பரவும் நோய், நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என அத்தனை விஷயங்களையும் அழகாகவும், தெளிவாகவும் அளித்துள்ளார் நூலாசிரியர் டாக்டர் பெ.போத்தி. நாய்கள் எப்படி மனிதனோடு ஒன்றி வந்தன என்ற விவரங்களையும், வகை வகையான, கண்ணைக் கவரும், உள்ளம் குதூகளிக்கும் அழகழகான நாய்களைப் பற்றியும், அவற்றின் பண்புகள், செயல்கள் பற்றியும் படிக்கப் படிக்க, நாமும் அந்த நன்றி உள்ள ஜீவனை வளர்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது இந்த நூல்.