இப்போது உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கொடியதா? என்றொரு வினாவை எழுப்பி உலகில் இதுவரை முதலாளித்துவம் செய்து வந்த செய்து வருகிற கொடுஞ்செயல்களைப் பற்றியும் தேசங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் மோதலை ஏற்படுத்தும் மரண வியாபாரிகளின் தந்திரங்களைப் பற்றியும் விவாதிக்கிறது. தோழர் தா பாண்டியன் எழுதியுள்ள கொரோனாவா முதலாளித்துவமா? என்னும் இந்நூல். கொரோனாவுக்குப் பிந்திய காலத்தில் பொருளாதாரத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூக அமைப்பையும் சீர்செய்வதற்கான கருத்துக்களை முன்வைக்கிறது இந்நூல்.