பீர்மேடு கேரளாவின் ரம்மியமான, கண்கவருமொரு சுற்றுலாத்தலம். அங்கிருக்கும்
கற்பனையான மலைக் கிராமம் ஒன்றைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட அழகானதொரு
நாவல் இது.
நாவலின் அடியோட்டம் நகைச்சுவைதான். பகடி முதல் வியப்பு வரையென நாவல்
முழுக்க இழையோடும் அங்கதத்திற்குக் குறைவேயில்லை. நாவலின் கதாபாத்திரங்கள்
நம் கவனத்தை ஈர்த்து, மனம் முழுக்க நிரம்பிக்கொள்கிறார்கள். புத்தகத்தை
மூடிவைத்த பிறகுகூட நெடுநேரம் நம் மனங்களிலேயே தங்கிவிடுகிறார்கள்.
மனமயக்கமூட்டும் இனிய இந்நாவல் சுவாரஸ்யமான திரைப்படம் ஒன்றைப்
பார்ப்பதுபோன்ற ஓர் அனுபவத்தை வழங்குகிறது.