மட்டக்களப்பின் பூர்விக வரலாறும், பூர்விக வழிபாட்டு முறைகளில் ஒன்றான குமார தெய்வ வழிபாடும் இந்நுாலில் ஆய்வு செய்யப்படுகின்றன. பண்பாடு சார்ந்த அம்சங்களைக் கொண்ட வரலாற்றெழுதியல் முறைமை என்ற போதிலும், இந்நுாலில் பெரும்பாலான தர்க்கங்களும் தகவல் மூலங்களும் கடந்தகால ஆவணங்களில் இருந்தும் அனுபவம் மற்றும் கள ஆய்வு சார்ந்தும் எடுத்தாளப்பட்டுள்ளன.
எ. விஜயரெட்ண (விஜய்) மட்டக்களப்பு, கிரான் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். 1980 களில் தேசிய விடுதலைப்போராட்டச் சூழலில் அது சமூக விடுதலைக்கான போராட்டமாகவும் மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தியலுடன் செயற்பட்டவர். மட்டக்களப்பில் நிலவிய அசாதாரண சூழலால் மலையகத்திற்கு இடம்பெயர்ந்து அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றுகிறார். பண்பாடு, வழிபாட்டுமுறைகள், தொன்மங்கள் போன்றவற்றில் ஆய்வுகள் மேற்கொண்டும் எழுதியும் வருகின்றார்.