என்னைச் சுத்தி எப்பவுமே மூணு விதமான மனிதர்களைப் பாக்கறேன். தன் கனவை நோக்கி உழைப்பு. இன்னொருவருடைய கனவுக்காக உழைப்பு. கனவும் வேண்டாம் உழைக்கவும் வேண்டாம். நான் இந்த மூணு மனநிலைக்கும் தாவிகிட்டே இருந்தேன். என் பயணமும் இந்தப் புத்தகமும் என்னை நான் தேட எடுத்த முயற்சி. இந்தப் புத்தகத்தைப் படிச்சு முடிக்கும் போது சமகாலத்தில் இருக்கற என்னைத் தெரிஞ்சுப்பீங்க, உங்களையும் கூட. ஸ்கூல், காலேஜ், வேலை, கல்யாணம், குழந்தை, வீடு, குழந்தையோட படிப்பு, அவங்க கல்யாணம், ரிடையர்மெண்ட், நோய் சாவு. இதுவும், இதுக்காக சிலதும், இதுக்கு நடுவுல சிலதும் மட்டும்தான் வாழ்க்கைன்னு சொல்லிட்டே இருந்தா...வேற எதுவும் இல்லையான்னு, வேலையை விட்டுட்டு, வீட்டுல இருந்து வெளியே வந்து, புல்லட்ல இந்தியா முழுவதும் பதினோரு மாசம் 22,000 கி.மீ. சுத்தினேன். ஏன் இந்த பயணம்? பயணம்? பயணத்துக்கு அப்புறம்!