உலகுக்கே ஆதாரமாக விளங்கும் நீரின் தோற்றுவாய் சிறுத்துக் கொண்டே செல்வதால்,விவசாய மேம்பாட்டில் பின்னடைவு ஏற்படுகிறது. இது ஒன்றும் வியப்புக்குரியதன்று. ஆனால்,அந்தப் பின்னடைவைத் தகர்த்துச் சீரான வழியி விவசாயம் வீறுநடை போடுவதற்கு, இன்றைய விஞ்ஞான்ம் எத்தனையோ வசதிகளை வடிவமைத்துக் கொடுத்துள்ளது. அவற்றுள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான பொறியியல் மிகவும் இன்றியமையாதது.
இப்பொறியியல் துறையில் நீர் ஒடும் குழாய்களின் இசைவு இயல்,மண் -பயிர்- நீர்த் தொடர்புகள்,பாசனக் கருவிகள் வடிவமைப்பும் செயல்திட்டமும் உள்ளிட்ட பல்வேறு சிறப்புக் கூறுகளை எளிமையாக எடுத்துரைக்கிறது.