படித்து முடித்துவிட்டு வேலை தேட ஆரம்பிப்பவர்களானாலும் சரி... ஏதேனும் ஒரு வேலையில் இருப்பவர்களானாலும் சரி... அந்த ஆசை எல்லோர் மனத்திலும் இருக்கத்தான் செய்யும்.
ஆனால், சொந்தமாக ஆரம்பித்தால் வெற்றி பெற முடியுமா?
நாம் உப்பு விற்கப் போகும்போது மழை பெய்துவிடுமோ?
மாவு விற்கப் போகும்போது காற்று அடித்துவிடுமோ என்ற பயமும் எல்லோர் மனத்திலும் இருக்கும். இந்தப் புத்தகம் அந்த பயத்தைப் போக்கி, உங்களை உச்சிக்குக் கொண்டுபோகப் போகிறது.
சொந்தத் தொழில் தொடங்குவது எப்படி?
அதை வெற்றிகரமாக நடத்துவது எப்படி?
என்னென்ன பிரச்னைகள் வரும்?
எப்படியெல்லாம் சமாளிக்கலாம்?
என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?
அதை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் இந்தப் புத்தகம் உங்களுக்கு சொல்லித் தருகிறது.