இந்த மிகவும் பயனுள்ள நூலை ஆக்கியவர் முனைவர் மு. லட்சுமணன் (JNU) அவர்கள். இவர் முசிறி அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) பணியாற்றி வருகிறார்.
உயிரின் தோற்றம் மற்றும் மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி விளக்கிக்கூறும் நூலாசிரியர் எவ்வாறு இயற்கைச்சூழலில் வாழ்ந்து வந்த மனிதன் பிரபஞ்சம், சூரியன் அதைச் சுற்றி இயங்கும் பூமி மற்றும் இதர கிரகங்கள் பற்றி புரிந்துகொண்டு படிப்படியாக தனது அறிவியலைப் பெருக்கிக்கொண்டான் எனபதையும் எடுத்துக்காட்டுகிறார்.