பூமிப்பரப்பில் தாவரங்கள் எதுவும் இல்லையேல், அதில் உயர்திணை அஃறிணை என எந்த உயிரினமும் வாழ்வதற்கு வழியை இல்லை. அத்தகைய தாவரங்களின் பூ, காய், கனி, இலை ,கிளை ,வேர், பட்டை மரம் என்று ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொரு வகையுல் மானிடர்களுக்குப் பலன் கொடுத்து வருகிறது.
விறகுகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் மட்டுமின்றி, காகிதம், ரப்பர் விளையாட்டுக் கருவிகள் போன்ற பொருட்களுக்கு மூலப் பொருட்களை வழங்குவதும் காடுகளே! மேலும், மரங்கள் தாம் மலையைப் பெறவும், நிலப்பரப்பில் தட்பவெப்பநிலையைச் சீராக வைக்கும், மண் அரிப்பைத் தடுக்கவும் உதவி புரிகின்றன. இந்நிலையில், நாட்டின் விரிந்த நயிலப்பரப்பில் ஆங்காங்கே விரவிக் கிடக்கும் தரிசு நிலப் பகுதிகளை முறையே பண்படுத்திப் பயன்பெறுவதற்கென்று முறையான திட்டம் தீட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
- பதிப்பகத்தார்.