இடைச்சங்க காலத்தில் இந்நாட்டில் பல மொழிகளின் கலப்பு காரணமாக சித்த மருத்துவத்திலும் பல்வேறு மருத்துவ முறை கலப்பு ஏற்பட்டது. ஒரு ஓலைச் சுவடியின் ஆயுட்காலம் 300 ஆண்டுகள் தான். சித்த மருத்துவர்கள் வீடுகளில் வைத்திருந்த ஓலைச்சுவடிகளும் கரையானால் அரித்து, அழிந்து போயின.பண்டைய மதுரையில் 2ம் நுாற்றாண்டின் இடைக்காலத்தில் தமிழ் கடைச்சங்கம் நடைபெற்றது. இது தமிழின் பொற்காலம் எனச் சொல்லலாம். மருத்துவர் தாமோதரனார் தமிழ் மருத்துவப் புலவராக இருந்து மருத்துவத்திற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை நிரூபனம் செய்கிறார். இடைச்சங்க காலத்தில் கிடைத்த மாபுராணம் என்ற மருத்துவ நுால் தமிழ் மருத்துவத்தின் தொன்மையை விளக்குகிறது. தமிழர் நாகரீகத்தோடு பல்வேறு இனக்குழுக்கள் இணைந்து இருந்தன. ஆகையால்தான் தமிழ்மொழியில் பல்வேறு சொற்களும் கலந்து இருக்கின்றன. மெசப்படோமியாவை விட பழமையான, ஆனால் அதற்கும் மேலான நாகரீகம் தமிழர் நாகரீகம் என்பதில் தற்சமயம் கிடைக்கும் பல்வேறு அகழ்வாராய்ச்சியின் மூலம்பெருமை கொள்ள முடியும்.