ஓர் அறிவியல் மேதை பொறியியல் துறையில் ஏதாவது சிக்கல்களா எங்கே விஸ்வேஸ்வேரய்யா என்று ஓர் இந்திய எஞ்சினியரை ஆங்கிலேயர்கள் தேடுமளவுக்கு புகழ் பெற்ற ஒரு புத்தி கூர்மையாளராக விளங்கியவர்!
பொறியியல் பணிகள் எதுவானாலும் அவற்றைப் பொறுப்போடும் விருப்போடும் செய்யவல்ல திறமை படைத்தவர் விஸ்வேஸ்வரய்யா!
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலம் ஆனால், அவர்கள் இந்தியர்களுடைய ஆற்றலையும், அறிவையும் கண்டு மதிப்பளிக்காமல், அடிமைகள் தானே; என்ன தெரியும் இந்தியர்களுக்கு என்ற ஆண்டான் அடிமை மனப்பான்மைகளோடு இந்தியாவை அர சோச்சிய நேரம்.