
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Free shipping over ₹500
கன்பூசியஸ் அந்தந்த நேரத்தில் எந்த காரியத்தையும் அலட்சியம் செய்யாமல்;
"செய்யும் தொழிலே தெய்வம்" என்பதாக மதித்துப் பணியாற்றிய ஒரு காரியவாதி!
ஒரு சமயம் ஆடுமாடுகளைக் கூட மேய்த்துக் கூலி பெற்றார்! மறுமுறையோர்
நேரத்தில் கால்நடைக் கண்காணிப்புக் கணக்கராகவும் காரியமாற்றினார்! அதே
மனிதரிதான், அமைச்சனாகவும், ஞானாசிரியனாகவும், மாணவப் போதகராகவும்
அலுவலாற்றினார். எதைச் செய்யத் துணிந்தாலும் காரியவாதியாகவே செயல்
புரித்தார்!
தத்துவ ஞானம் கற்றுத் தரித்திரராக ஊர் சுற்றிச் சுற்றி வறுமையோடும் போராடிடும் நாடோடியாகவும் திரிந்தவர் கன்பூசியஸ்!
மேற்கண்ட அத்தனைச் சிறப்புகளும், மேன்மைகளும் ஒன்றாக இணைந்த ஒரு
மனித உருவமாக, ஞான ஆத்மாவாக, புதிய எண்ணங்கள் என்ற பூக்கள் மலரும் செடி
கொடிகளாக, புதிய லட்சியக் கனிகள் பழுக்கும் முக்கனி மரங்களாக மக்கள் இடையே
நடமாடிய ஒர் அற்புத ஞானாவதாரமாக, வானகம் தந்த இயற்கைக் கொடையாக நடமாடியவர்
கன்பூசியஸ் என்றால் மிகையாகா!
இவ்வளவு அரிய திறன்களை எல்லாம் தனது அறிவு எனும் தோளிலே சுமந்த கன்பூசியசின் லட்சியம் தான் என்ன? என்று கேட்கிறீர்களா?
வேறோன்றும் இல்லை. நமது சங்ககாலக் கவிஞனான பூங்குன்றனார் கண்ட
கனவான, "யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற தத்துவத்தை நனவாக்கிட, "ஒரே
உலகம், ஒரே மனித சமுதாயம்"; ஒரே பொது ஒழுக்கம் என்ற பெயர் சூட்டி அதற்காக
அயராமல் உழைத்தவர்தான் கன்பூசியஸ்!
உலகம் முழுவதற்கும் ஒரே ஒழுங்கு ஒரே பொது நெறி; என்ற உலகப் பொதுநல
சமுதாயம் அமைக்கவும், அந்த சமுதாயத்தில் தன்னலமற்ற தனி மனிதன் பொது மகனாக
வாழவும், அன்புவழியில் அனைவரிடமும் சமத்துவ சகோதரத்துவப் பாசத்தோடு, அற
நெறிகளைப் பின்பற்றிப் பழகவும், மனிதத்தன்மையைப் பன்படுத்தி வளர்ந்து
இயற்கையோடு இணைந்து, முழு மனிதனாக வாழ்வதும் தான் அந்த உலக சமுதாயத்தின்
இலட்சியம் என்பதைச் சீன மக்களுக்கு எடுத்துக்காட்டியவர் கன்பூசியஸ்.
Topics / குறியீடுகள்