நாடறிந்த நடனக் கலைஞர், இயக்குநர், நடிகர் என்கிற பன்மைத்துவம் வாய்ந்த கலைகளில் கைதேர்ந்த ஒருவர் தனது தடங்களை நமக்கு அடையாளம் காட்டுகிறார். இது அவரது ஞாபகத் தடம்தான். இதை வாசிக்கிறவர்களையும் அந்தத் தடத்தில் சக பயணியாக்கிவிடுகிறது அவர் சொல்கிற செய்திகள். ஒரு சினிமா கலைஞர், யதார்த்த உலகுக்கு ஏற்ற வடிவில், உலகியல் தன்மையோடு தன்னை எவ்விதம் தகவமைத்துக்கொண்டுள்ளார் என்பதை இப்புத்தகத்தின் பல அத்தியாயங்கள் சுவையாகச் சொல்கின்றன