விலங்குகள் தங்களின் உணர்ச்சியை கட்டுப்படுத்த, அதாவது டென்ஷனை கட்டுப்படுத்த மதுபானக் கடைகளுக்குச் செல்வதில்லை. ஒரு மரத்தடி நிழலில் நின்று சங்கிலித் தொடராகப் புகைப்பதில்லை. ஒரு எலி டென்ஷனானால் தன மூக்கை நன்றாக சொறிந்து தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும். ஒரு குரங்கு தன் டென்ஷனை குறைக்க வினோத சப்தத்தை உரக்க எழுப்பிக் கொள்ளும். ஒரு நாய் குரைத்தே தனது டென்ஷனை போக்கிக் கொள்ளும்.