ஏவாளின் கதையை மறு எழுத்தாக்கம் செய்யும் சிவசங்கருக்கு பைபிள் கதையிலிருந்து கில்நாஸ்டியா வரையிலும் நிறையக் கேள்விகள் எழுகின்றன; விமர்சனங்கள் உண்டாகின்றன; அதிருப்தியும் ஆவேசமும் ஏற்படுகின்றன. கேள்விகளும் விமர்சனங்களும் பல்வேறான வடிவங்களிலும் சாத்தியப்பாடுகளிலும் புனைவாகின்றன. ஏவாளின் சித்தப் பிரமையும் பிதற்றலும் தூக்கிலேறப் போகின்றவனின் பதற்றமும் கலைஞர்களின் தவிப்புகளும் வெளிப்படுகின்றன. கலைஞனின் தேடல் சிரத்தையும் அக்கறையும் கொண்டிருக்கும்போது, பல நூற்றாண்டு காலவெளியைத் தொட்டு, இத்தருணத்தில் சிலிர்ப்பையும் சிறகடிப்பையும் ஏற்படுத்திட இயலும். இது சிவசங்கரின் எழுத்தில் இயல்பாக நிகழ்கிறது. -சா. தேவதாஸ்