புதிய கவிஞர் பதீக்கின் கவிதைகளிடையே ஆங்காங்கு மிளிரும் பாரதியினதும் பாரசீக்க் கவிஞர்களதும் எதிரொலி பரவசம் தருகிறது. பெருநதியின் மீது வார்த்தைகளற்றிருக்கும் இன்பம், பாதி உலர்ந்த கூந்தலில் சிந்தும் நீர்த்துளி எழுப்புகிற ஞானம், கவர்ச்சியான சொற்களை அணியாத இரவுகளின் மாறும் வடிவங்கள் எனப் பதீக்கின் கவிதைகள் நம்மை வசீகரமும் வேட்கையும் த்த்தளிப்பும் நிறைந்த வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றன.