நான் இன்னும் பத்து வரிடங்கள் இவ்வுலகில் வாழ்வதாயிருந்தால், அவற்றில் ஒன்பது வரிடங்கள் என் மனத்தைத் திடப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பேன். பத்தாவது வருடம் மனோதிடத்துடன் காரியத்தை ஆரம்பித்து எண்ணியதை எய்தியே தீருவேன். இது சுவாமி விவேகானந்தரின் கூற்று. இவெவாறு நாமும் எண்ணியதை எண்ணியபடி முடிக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படைத் தேவை மனோதிடம்தான்.
இத்தகைய மனோதிடத்தை உருவாக்கிக்கொள்வதற்கு, நமது அக வாழ்க்கையையும், புற வாழ்க்கையையும் நாமே கூர்ந்து நோக்கி, நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.அவ்வாறு புரிந்து கொண்டால், நாம் இவ்வுலகைப் புரிந்துகொள்வதும். நம்மை இவ்வுலகு புரிந்துகொள்வதும் மிகவும் எளிதாகிவிடும். இந்தப் புரிதலுக்கான இலக்கணத்தை எண்ணற்ற அறிஞர்கள் தங்களுடைய வாழ்வின் வாயிலாகப் பட்டுணர்ந்து, நம்முடைய வாழ்வுக்காக -அர்த்தமுள்ள வாழ்வுக்காக -எடுத்துரைத்துள்ளனர். இப்படிப்பட்ட வாழ்வியல் அறிஞர்களின் பொன் மொழிகளை உலகப் பேரறிஞர்களின் பொன்மொழிகள் என்னும் இந்நூல் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூலாசிரியர்.
- பதிப்பகத்தார்.