உடமலை முத்துச்சாமிக் கவிராயர் எழுதிய கீழ்வரும் பாடலிலிருந்து யவன காவியம் என்கிற இந்நூலின் பெருமையினை அறியலாம்.
கேரளம் சிந்தா மணிஅலங்காம் கிளத்துகின்ற
கூர்அருள் சேரும் குமார சுவாமியம் கோள்நிலைமைச்
சீர்அணி உள்ள முடையான்மற்றி யாவும் நிகழ்யவனர்
பார்அதிச் சோதிடம் முன்வைக்கில் பானுமுன் பன்மின்னதே!
யவன காவியம் என்னும் இந்நூலோடு ஒப்பு நோக்கும்போது - மணிகண்ட கேரளம், ஊஆதக சிந்தாமணி, ஜாதக அலங்காரம் குமாராசுவவமியம், வீமமேசு உள்ளமுடையான் மற்றும் இன்னபிற ஜோதிட நூல்கள் எல்லாம் சூரியனின் ஒளிக்கு முன் மின்னல்களின் ஒளி மங்கிப் போவதைப் போன்றதாகும் என்பது இப்பாடலின் பொருளாகும்.
இந்நூலில் 12 பாவங்களின் காரகத்துவங்கள். கிரகங்களின் காரகத்துவங்கள். அவற்றின் நட்பு, பகை விவரங்கள், 12 ராசிக்கும் சுபர், பாவர், யாகர், மாரகர் பற்றிய விவரங்களும், யோகங்கள், பிரசவ விதி, பிரசவ காலம் மற்றும் பல பொதுவான விஈயங்களும், அந்தந்த பாவங்களுக்குரிய பல்வேறு நுணுக்கமான ஜோதிட விதிமுறைகளும் தரப்பட்டுள்ளன.
ஜோதிட கணிதப் பேர்ரசு எஸ்.எம். சதாசிவம் அவர்களின் விளக்கமான விரிவுரையுடன் கூடிய இந்நூல் ஜோதிட ஆர்வலர்களுக்குப் பயன் தரும் நூலாக அமையும்.