"காணும் யாவிலும் நீயே" கதை "கன " சித்தார்த் பிரகதீஸ்வரி இருவரின் மகனான இந்திரஜித்தை நாயகனாகக் வடிவமைக்கப்பட்ட கதை... வெற்றுக் களிமண்ணை சிலையாய் சமைந்த உன்னதப் புருசன் இவன். இவனது காதல் இணையான சம்யுக்தாவும் இவனுக்குச் சற்றும் சளைத்தவள் இல்லை... கண்ணன் மீது பக்தி கொண்ட மீரா போன்று இவளும் தன்னவனிடத்தில் காதலை தாண்டிய ஒருவித பக்தியை வைத்திருக்கிறாள்.