எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று இலக்கணத்திற்கும் உரிய இலக்கணங்களை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. எழுத்துக்கான இலக்கணத்தை தொல்காப்பியம் போல் நன்னூலும் நேமிநாதமும் எடுத்தியம்புகின்றன. 'எழுத்து எனப்படுபவ அ முதல் ன வரை உள்ள முப்பது எழுத்துக்கள் '[1] ஆகும் . எழுத்துக்களின் எண், பெயர், பிறப்பு முதலிய தன்மைகளைக் கூறுவன எழுத்து இலக்கணம் ஆகும். மொழிக்கு முதற்காரணமாய் காதாற் கேட்கப்படும் ஒலி அணுத்திரனில் காரியமாய் இருப்பது எழுத்தாகும். இவ் எழுத்துக்கள் ஒலி, வரி வடிவங்கள் கொண்டவை. ஒலி வடிவின் எழுத்துக்கு அடையாளமான ஒரு குறியீடாகவே வரிவடிவம் அமைகின்றது.