‘வாழ்ந்தவர்
கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்றும்
‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர்
சொல்ல வேண்டும்’ என்றும் தான் பாடிய பாடல்களுக்கு நடைமுறை உதாரணமாக
வாழ்ந்து மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். அவரது
நினைவு நாளான இன்று - டிசம்பர் 24 - அவரை நினைவு கூர்வதில் மிகவும்
மகிழ்ச்சியடைகிறேன்.
* கர்ணன் படத்தில் சிவாஜிக்கு முன்னால்
எம்.ஜி.ஆரிடம்தான் நடிக்கக் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’
என்று அண்ணா சொன்னதால் மறுத்து விட்டார் எம்.ஜி.ஆர்.