உத்தமமான சிறுகதைகளாகத்தான் இப்போது இவைகளை படிக்கும் போதும் தோன்றுகிறது.
எந்த மாறுதலும் செய்ய மனம் வரவில்லை. மறுபடி படிக்கும்பொழுது எழுதிய
காலகட்டமும், மேஜை நாற்காலியும் கதை மாந்தரும், மனதில் வந்து போனார்கள்.
சிறிது வசதி கூட இல்லாத ஒரு ஏழ்மை சூழலில்தான் இவை எழுதப்பட்டன. ஆனால் அந்த
வருத்தம் அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை. ஒரு தகவலாகத்தான் மனத்தில்
மொய்த்துக் கொண்டிருக்கிறது. சிறுகதைகள் மட்டுமல்லாது நீண்ட சிறுகதையும்,
குறுநாவலும் இணைக்கப்பட்டிருக்கிறது.