இந்தியாவில் பெரும்பாலும் படித்தவர்கள் தான் ஒன்று இரண்டு குழந்தைகளுடன் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை நிறுத்திக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளும் அறிவிலிகளும் குழந்தைகள் பெற்றுக்கொள்வதைக் குறைத்துக் கொள்வதில்லை,
அரசியல்வாதிகள் தனது குழந்தைகளைத் தெருவில் விடுவதில்லை. எழைகளும் பொறுப்பற்றவர்களும் மட்டுமே குழந்தைகளைப் பராமரிக்காமலும் பாதுகாக்காமலும் தெருவில் விட்டுவிடுகிறார்கள். தெருவில் விடப்படும் பல குழந்தைகள், பிச்சை எடுப்பதற்காகவும், மனித உறுப்புகளைக் கழற்றிக் கொள்வதற்காகவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுவதற்காகவும் பிடித்துச் செல்லப்படுகிறார்கள்
குழந்தையைப் பிச்சையெடுத்தலுக்குப் பயன்படுத்தினால் அது குற்றம் என்று இந்தச் சட்டம் சொல்கிறது. அந்தக் குற்றத்திற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஒரு இலட்சம் வரையில் அபராதம் என்று இந்தச் சட்டம் தண்டனையையும் வரையறுத்திருக்கிறது. ஆனால் இதன்படி யாரையும் தண்டித்ததாகத் தெரியவில்லை