யோகி ராம்சுரத்குமார்(ஆங்கிலம்:Yogi Ramsuratkumar): (இந்தி: योगी राम सुरत कुमार}}) (டிசம்பர் 1, 1918 – பிப்ரவரி 20, 2001). விசிறி சாமியார் என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார். ஞானம் அடைந்த பின்பு, இறக்கும் வரை திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து மக்களுக்கு பக்தி நெறியும், ஞான யோகத்தையும் ஊட்டினார். அரவிந்தர், இரமண மகரிசி, இராமதாசர் ஆகியவர்களை தமது குருவாக கொண்டவர்.