திருமணம் என்பது ஆயிரங்காத்துப் பயிர். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு திருமணம் என்ற பந்தத்தில் நுழைந்த தம்பதியர் - தங்களது திருமண பரிசாக முதன் முதலாக எதிர்பார்ப்பது குழந்தை செல்வமே.அதாவது. ஒரு ஜாதகர் பிறக்கும் போதே அவரது எதிர்காலம் மட்டுமல்ல ; அவரது குழந்தைகளின் எதிர்காலமும் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது என்பது ஜோதிடநூல் வல்லுநர்களின் கருத்தாகும். ஆனால், இந்நூலில் மேற்கூறிய விஷயங்கள் போக குழந்தைகளின் படிப்பு, திருமணம், தொழில்விபரம், தெய்வபக்தி, நோய் விபரம், மாரக விபரம், ஒவ்வொரு குழந்தையின் குணாதிசயங்கள் ஒவ்வொரு குழந்தையின் யோக விபரம், ஆயுள் விபரம், தாய் தந்தையரின் உறவுநிலை, வெளிநாடு செல்லும் விபரம் , சத்துரு விஷயம் போன்ற அனைத்து விஷயங்களையும் காணலாம். நீண்ட கால ஆராய்ச்சி மூலம் இந்தப்புதிய கணித்த்தைக் கண்டுபிடித்து, அனுபவ ரீதியாக ஒத்து வருகிறதா? என ஆராய்ந்து தெளிந்த பின்னரே, இந்நூலை எழுத முற்பட்டுள்ளேன். என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலிலுள்ள வாசகங்கள் வேறு எந்த விதமான ஜோதிட நூலையோ (அ) பழைய ஏட்டுச் சுவடியையோ தழுவி வரவில்லை என்று கூற விரும்புகிறேன்.
A. பிரகஸ்பதி எம். ஏ. பி.ஏ. எஸ்.