நாடிகள் கிளை விரித்து இருக்கிற சிதைந்த கோயில் கோபுரம், எங்கோ செரிந்து
கிடக்கிற கல்மண்டபங்கள், முட்கள் அடைந்து தூர்ந்துபோன பொதுக்கிணறுகள்,
மண்ணுக்குள் முகம் புதைந்திருக்கிற படித்துறைகள், கை, கால் உடைந்த
கற்சிலைகள், செங்கற்களாகவும் கற்தூண்களாகவும் அனாதையாக நிற்கிற
கட்டிடங்கள்... இன்னும் இன்னுமாய் நீங்கள் பார்க்கிற ஏதாவது ஒன்றில்
சிதையாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறது ஒரு வரலாறு. அது உங்களுக்கானதாகவோ
நமக்கானதாகவோ இருந்திருக்கலாம். அப்படியான வரலாறுகளைக் கொண்டிருக்கிற
கிராமங்களில் வாழ்ந்த, வாழும் எளிய மனிதர்கள் பற்றிய கதைகள் இவை. கதைகள்
என்பதை விட அவர்களைப் பற்றிய சுருக்கமான வரலாறாகவும் இதைக் கொள்ளலாம்.