கொங்கு நாட்டுப் பகுதியில் இருந்த ‘சிவிங்கிப் புலி' இன்று இங்கே
இல்லை. நாட்டின் மற்ற இடங்களிலிருக்கும் சிங்கம், வரையாடு முதலிய
அற்புத சிருஷ்டிகள் அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
பூமியின் வரலாற்றிலேயே நம் காலத்தில்தான் உயிரினங்கள் வேகமாக ஒன்றன்பின்
ஒன்றாக மறைந்து கொண்டிருக்கின்றன என்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்த
அழிவிற்குக் காரணம் மனிதன் என்னும் ஓர் உயிரினமே. முன்னேற்றம் என்ற பெயரில்
நம் மூதாதையர் போற்றி வளர்த்த பல வீட்டு மிருகங்களும் மறைந்துபோய்க்
கொண்டிருக்கின்றன. காங்கேயம் காளை, கத்தியவார் குதிரை, கோம்பை நாய் போன்ற
பல நம் நாட்டு உயிரினங்கள் பேணப்படாமல் மறைந்துகொண்டிருக்கின்றன. தாவரங்கள்
நிலையும் இவ்வாறே. ஆலமரமும், சீதா மரமும் காண்பதற்கு அரிதாகி வருகின்றன.
பல்லுயிரினம் நம் பூமிக்கே உள்ள செல்வமாகும். இந்த செல்வங்களை நாம் பேண
வேண்டும். நாமும் இந்த உயிரினச் சூழலில் ஒரு அங்கம் என்பதை உணர வேண்டும்.
இந்த நூல் அதற்கு உதவி செய்யலாம்.