ஸ்டாலின் முகுந்த் நாகராஜனுக்கு முன்னரே பிரசுரிக்க ஆரம்பித்தவர் என்றாலும் முகுந்தின் உளவியல் ஆழம் இவருக்கு இல்லை. முகுந்த் தன் கவிதைகளில் ஒரு சித்திரத்தை வேகமான கோடுகள் இழுத்து சட்டென உருவாக்குவார். பிறகு அங்கிருந்து ஒரு தாவல் இருக்கும். ஒன்று மற்றொன்றாக மாறும். அது அவர் கவிதைக்கு ஒரு தனி பிரகாசம் அளிக்கும். ஸ்டாலின் இதே பாணியில் ஒரு அழகான காட்சியை உறைய வைக்கிறார். ஆனால் உறைய வைப்பதோடு நின்று போகிறார். இது அவரது பலவீனம். அபிமன்யுவைப் போல் அவர் சக்கரவியூகத்தை உருவாக்க சமர்த்தர்; ஆனால் அதை உடைத்து வெளிவரத் தெரியாது.
முகுந்த் பாணியிலான இந்த கவிதையை பாருங்கள்: