கடற்கரைப் பூக்களைப் கிளிஞ்சல்கள் இறைந்து கிடக்கின்றன. எல்லாவற்றிலும் மனிதக் குறிப்புகளை ரகசியமாய் எழுதிய நீரின் வரிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. மணலில் அளையும் கைகளிடம் அவை முறையிட்டுக் கொண்டே இருக்கின்றன. யாராவது ஒருவர் அறிந்தால் போதும். அவை பறந்துவிடக் கூடும் . கவிதைகளுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறது.