ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மற்றும் ய.சு.ராஜன் எழுதிய, நெல்லை. சு. முத்து தமிழில் மொழிபெயர்த்த, இந்தியா புத்தாயிரம் ஆண்டுகளுக்கான தொலைநோக்கினை முன்வைத்துள்ள நூலாகும். இந்நூல் மாணவர் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது.
இந்நூல் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக முடியுமா? தொழில்நுட்பத் தொலைநோக்கு 2020 பரிணாம வளர்ச்சி, வருங்காலத்திற்கான தயாரிப்பு நுட்பம், அனைவர்க்கும் உடல்நலப் பராமரிப்பு, உறுதுணை நல்கும் உள்கட்டமைப்பு என்ற தலைப்புகள் உள்ளிட்ட 12 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ள நூலாகும். நூலின் இறுதியில் பிற்சேர்க்கை, மேற்கோள்களும் மேற்கொண்டு படிக்க வேண்டியனவும், தமிழ்க்கலைச் சொற்கள் ஆகியன தரப்பட்டுள்ளன.