
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Free shipping over ₹500
கவுதம புத்தர் வாழ்ந்த காலக்கட்டத்தின்
பின்னணியில் இந்த நாவலை எழுதியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே. பவுத்தம்,
தாவோயிஸம், கிறித்தவம், இந்து போன்ற சமயக் கருத்தாக்கங்களின் தாக்கமாக
இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும், இறுதியில் பொதுவான சமயக்
கருத்துகளை நிராகரிக்கிறது.வாழ்க்கையின் உண்மை, அடையாளத்தைத் தேடும் அகப்பயணமாக இந்த நாவல்
இருக்கிறது. தனது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களின் எதிரொலியாக முதன்மைக்
கதாபாத்திரமான சித்தார்த்தனின் வாழ்க்கைக் கதையின் மூலம் விடுதலையின்
பாதையை ஹெர்மன் ஹெஸ்ஸே விளக்கியிருக்கிறார்.ஜெர்மானிய மொழியில் 1922-ம் ஆண்டு வெளியான இந்த நாவல், 1951-ம் ஆண்டு
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகுதான், உலகம் முழுவதும் பிரபலமானது.
1972ல் கான்ராட் ரூக்ஸ் ஆங்கிலத்தில் Siddhartha என்ற பெயரில் திரைப்படமாக
இயக்கியுள்ளார்.