வாழ்க்கையில்,எல்லோருக்கும் பலவகைத் தேவைகள் .முக்கியத் தேவைகளா உணவு,உடை,வாழ்விடம் ஆகியவற்றோடு, பலருக்கும் பல்வேறு தேவைகள் உள்ளன.இத்தனை தேவைகள் மத்தியில், ஒன்று மட்டும் தேவையின்றி வருகிறது.அதுதான் நோய்.நோயினால் பாதிக்கப்படுவதை யாரும் விரும்புவார்களா? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அதை மிஞ்சிய செல்வமில்லை.உடல் ஆரோக்கியம், ஒவ்வொருவருக்கும் ஆசிர்வாதம்.