சோழர் காலக் கல்வெட்டுகள் தனித்தன்மை வாய்ந்தவை. கல்வெட்டின் தொடக்கத்தை வைத்தே குறிப்பிட்ட காலத்தை அல்லது குறிப்பிட்ட அரச மரபால் வெட்டப்பட்டது எனக் கூற முடியும். சோழர் காலக் கல்வெட்டுகளில் குறிப்பிடத்தக்கவை மெய்கீர்த்தி என்னும் கல்வெட்டுப் பகுதியாகும். இவை செய்திகளைக் கூறுவதில் ஓர் இலக்கிய வடிவைப் பெற்றுத் திகழ்ந்தன.