*உடல் பருமனாக உள்ளவர்கள் அறுவைச் சிகிச்சை உலம் 'சிக்' உடல்வாகு பெறமுடியுமா?
*'கீழாநெல்லி' சாப்பிட்டால் மஞ்சள் காமாலை சரியாகுமா?
*மது பழக்கத்தால் ஜிரண உறுப்புகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன?
*ஒரு முறை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பிறகு அப்பெண்டிசைடிஸ் மீண்டும் வருமா?
- வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் தெளிவாக விளக்கி அவற்றுக்கான நவீன சிகிச்சை முறைகளையும் எளிமையாக விவரிக்கிறது இந்தப் புத்தகம்.
டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார், 1985 ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று 32 தங்கப் பதக்கங்களுடன் வெளியே வந்தவர். இந்தியாவில் இருக்கும் லாபரோஸ்கோபிக் அறுவைச் சிகிச்சை நிபுணர்களில் முக்கியமானவர். நூலாசிரியரின் முதல் புத்தகமான?'ஒரு சாண் உலகம்', வெளிவந்த சில மாதங்களிலேயே 10,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகியிருக்கிறது. ஜிரண மண்டலம் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் இந்நூலின் இரண்டாம் பாகமாகவே இப்புத்தகத்தைக் கொள்ளலாம்.