அலாரம் அடிக்கும் முன்பே பூர்ணிமாவிற்கு விழிப்பு கண்டு விட்டது. எப்போதுமே இப்படித்தான். மறுதினம் செய்ய வேண்டிய பிரதான வேலைகளை நினைத்துக் கொண்டு படுத்தால் காலையில் தூக்கமே வராது. நேற்று இரவும், இன்று ஆரம்பமாகின்ற முழு ஆண்டுத் தேர்வை யோசித்தபடி படுத்தது ஞாபகம் வந்தது.