சாம்சனின் கவிதை உலகம் கற்பனைகளின் ஒப்பனைகளிலிருந்து பிறந்ததல்ல. அசகாய சூரர்கள் போல் அசுர வித்தை செய்யும் நோக்கமும் அவருக்கு இல்லை.வார்த்தைச் சிக்கனம். வடிவநேர்த்தி, படிமச் செருகல், சதுரங்க சாகசம் என்னும் கவிதைக் கோடுகளுக்குள் இவர் கவிதை அடங்குவதில்லை. தன்னுடைய வடிவத்தைத் தானே கட்டமைத்துக் கொள்ளும் தண்ணீர் போல், படைப்பின் ஒழுங்கைத் தனக்குத் தானே சீரமைத்துக் கொண்டு பிறந்திருப்பவை சாம்சன் கவிதைகள்.