இலக்கிய சேவைக்காக இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீடம் உள்பட பல இலக்கிய விருதுகளைப் பெற்றவர் எஸ்.கெ. பொற்றெக் காட் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற பெருமை இவருக்குண்டு. 1962- ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு பாராளுமன்ற உறுப்பினரானார். இதில் இடம்பெற்றுள்ள புள்ளிமான் கதையும் இதே நூலாசிரியர் எழுதிய மூன்று சிறுகதைகளும் மனித உள்ளங்களின் ஆழங்களைக் கண்ட உணர்வினை வெளிப்படுத்துகிறது.