இந்த நூலின் தனிச்சிறப்பு இதன் எளிமை யார் வேண்டுமானாலும் படித்து எளிதில் புரிந்துகொள்ள முடியும். அடுத்து, ஒருவர் பெயரை அதிர்ஷ்டம் எண்ணில் அமைக்கும் போது, பிறவி எண், விதி எண்ணுக்கு ஏற்ற வகையில் அமைய வேண்டும் என்று சமன்பாடு கணக்கு போட்டு விளக்கி இருக்கும் நேர்த்தி. திருமணமானவர்கள் தங்கள் விதி எண், பிறவி எண்ணுக்குத் தகுந்தாற்போல் அதிர்ஷ்ட எண்ணில் பெயர் அமைத்துக் கொண்டால் பலனில்லை. மனைவி, குழந்தைகளின் விதி எண், பெயர் எண்ணையும் சேர்த்துக் கணித்தால்தான் சரியாகப் பலன் கிடைக்கும் என்று விளக்கி இருப்பது அருமையானது.