எண்கள்தான் இன்று உலகத்தை ஆளுகிறது. ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு அலைவரிசையுண்டு. இந்த அலைவரிசை களின் ஆட்டுவித்தலுக்கு ஆட்படாதவர் யார்? இந்த அலை வரிசைகளின் ஆளுமையால் பல மாமன்னர்களின் சாம் ராஜ்யங்கள் சரிந்து மண்மேடாகியிருக்கிறது. பல ஒட்டாண்டிகள் மாமன்னர்களாகியிருக்கிறார்கள்.
இது சரித்திரம் படைத்த உண்மை. இந்த ஆட்டுவித்தல் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஏற்படும் நிதர்சனம். இதில் விதிவிலக்கு எதுவுமில்லை.
இந்த எண்களின் ஆளுமையை ஆய்ந்து உலகிற்குச் சொன்ன முதல் பிதாமகன் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சீரோ என்பவராவார். 'நியூமராலாஜி' என்ற இந்த எண்கணித முறைதான் இன்று உலக மக்கள் பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பின்பற்றப்படுகிறது.