கர்ம
வீரர், ஏழைகளின் ஏந்தல், கறுப்பு காந்தி, கல்வி வள்ளல் என்று பல வகையிலும்
போற்றப்படுபவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் தமிழகத்தின் முதலமைச்சராக
பதவி வகித்த ஒன்பது ஆண்டுகளும் 'தமிழகத்தின் பொற்காலம்' என்று
போற்றப்படுகிறது. காரணம், அவர் ஏழைகளின் வாழ்வில் வளியை ஏற்றி வைத்தார்.
கல்வி அறிவில்லாத மக்களுக்கு கல்வி அளித்தார். ஏழைக் குழந்தைகளுக்காக
பள்ளிக்கூடங்களில் இலவச மதிய உணவுத்திட்டத்தை ஏற்படுத்தினார்.