திராவிடர் இயக்கக் கவிதா மண்டலத்து நவமணிகளில் ஒன் றாக முத்துப் போன்று மிளிர்ந்து கொண்டிருப்பவர் கவிஞர் முத்துலிங்கம்.
அவரது பெயரின் பகுதியாக விளங்கும் முத்து எங்கெங்கே பிறக்கின்றதோ, அதற்கேற்பத் தகுதியும் தரமும் உண்டு.
இப்பி, உடும்பு, கடல்மீன், கதலி, கழுகு, கமலம், கரும்பு, சங்கு, செந்நெல், திங்கள், நத்து, நாகம், மூங்கில், மேகம், யானை, மருப்பு, போன்ற இடங்கள் எல்லாம் முத்துமணி பிறக்கிற இடங்களாகும்.
அவரது திருப் பெயரின் விகுதியான 'லிங்கம் என்ற சொல், அவனி வாழ் மக்கள் தியானித்து வழிபடுதற்குரிய தெய்வீகக் குறியாகும்.
மேதினி வாழ் மக்கள் மேம்பட முத்தொத்த இலட்சிய முத்தி பெற பிறவிக் கடலில் மூழ்கி உய்வுற, வாழ்க்கையிலே மக்கள் அவரவர் ஒர் அடையாளத்தைப் பதித்து மறைவது உலகியல் மரபு அதுதான் பிறப்புக்குரிய சான்று!
கவிஞர் முத்துலிங்கம், தனது திரையுலக எழுத்துத் துறையில் பதித்துள்ள அறிவின் சான்றே அவரது திரையிசைப் பாடல் களாகும்.